கடவுள் என்று கூறி சிறுமிகளை வேட்டையாடிய சிவசங்கர் பாபா : குண்டர் சட்டம் பாய வாய்ப்பு?

 

கடவுள் என்று கூறி சிறுமிகளை வேட்டையாடிய சிவசங்கர் பாபா :  குண்டர் சட்டம் பாய வாய்ப்பு?

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா மீது குண்டர் சட்டம் பாயும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது சமீபத்தில் பாலியல் புகார்கள் குவிந்தன. சிவசங்கர் பாபா அங்கு படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினர்.

கடவுள் என்று கூறி சிறுமிகளை வேட்டையாடிய சிவசங்கர் பாபா :  குண்டர் சட்டம் பாய வாய்ப்பு?

சிவசங்கர் பாபா மாணவிகளிடம் தான் கிருஷ்ணர் என்றும் நீங்கள் கோபிகா என்று கூறி பாலியல் இச்சைக்கு சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார். இதில் பல ஆசிரியர்களும் உடந்தை என்று தெரிகிறது. அத்துடன் அவரை கடவுள் என்று மாணவிகளை நம்ப வைத்த அவர்கள் அவருடன் உடலுறவு வைத்துக்கொண்டால் தான் பிறந்த பலனை அடைவீர்கள் என்றும் மூளை சலவை செய்துள்ளனர். இப்படி பல பகீர் புகார்கள் சிவசங்கர் பாபா மீது முன்வைக்கப்படுகிறது.

கடவுள் என்று கூறி சிறுமிகளை வேட்டையாடிய சிவசங்கர் பாபா :  குண்டர் சட்டம் பாய வாய்ப்பு?

இந்த வழக்கு ஆரம்பமானது முதலே டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் சிவசங்கர் மொட்டையடித்தபடி அங்கிருந்து தப்பி செல்ல நினைத்த நிலையில் காசியாபாதில் சிக்கினார். பின்னர் அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபின், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் பாலியல் புகாரில் கைதாகி சென்னை கொண்டுவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்திலும் சிவசங்கர் பாபா கைதாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.