ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

 

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

திருப்பத்தூரில் அரிசி கடத்தல், கள்ளச்சாராயம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து அரசி கடத்தல், கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சின்னராசு என்பவரும் கல்லப்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வநதுள்ளனர். அதே போல, வாணியம்பாடி சித்தீகாபாத் பகுயை சேர்ந்த அனு என்பவர் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

இந்த 3 பேருக்கும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து அதனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் பரிந்துரைத்தன் பேரில், மாவட்ட ஆட்சியர் சிவனஅருள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.