கொரோனாவுக்கு மருந்து..போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தின் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

 

கொரோனாவுக்கு மருந்து..போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தின் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத இந்த இக்கட்டான சூழலில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன.

கொரோனாவுக்கு மருந்து..போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தின் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

குறிப்பாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரப்பி வந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் தகவல்கள் பரப்புவது The Epidemic Diseases Act and Regu- lations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளதால் அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி அவர் கடந்த 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியது மட்டுமில்லாமல், மக்களிடம் கொரோனா சிகிச்சை செய்வதாக பணம் பறித்ததாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்தன. இதனால் போலி சித்த மருத்துவர் மீது சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.