பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டாஸ்!

 

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டாஸ்!

பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி திமுக குறித்தும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும் முதல்வர் மு.க ஸ்டாலின் பற்றியும் இழிவான கருத்துகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியதையடுத்து சங்கர் நகர் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டாஸ்!

இதைத்தொடர்ந்து, பெண் பத்திரிக்கையாளர் பற்றி ஆபாசக் கருத்துக்களை அவர் பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோர் கே.சாமியை இரண்டாவது முறையாக கைது செய்தனர். பின்னர், நடிகை ரோகிணி உட்பட 3 பேர் தொலைக்காட்சி நபர் ஒருவருக்கு கிஷோர் மிரட்டல் விடுத்ததாக புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சாமி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தலைவர்கள், பத்திரிகை நிருபர்கள் பற்றி அவதூறாக பேசிய கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.