சென்னை அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கிச்சூடு; அதிர்ச்சி சம்பவம்!

 

சென்னை அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கிச்சூடு; அதிர்ச்சி சம்பவம்!

ராயபுரத்தில் குடும்பத் தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரத்தில் வசித்து வருபவர் அசாருதீன். இவரது உறவினர் தொழிலதிபர் சையது இப்ராஹிம். இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று குடும்பத் தகராறில் அசாருதீனுக்கும் இப்ராஹிமுக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை கைகலப்பாக மாற, இப்ராஹிம் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அசாருதீன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

சென்னை அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கிச்சூடு; அதிர்ச்சி சம்பவம்!

இதில் படுகாயம் அடைந்த அசாருதீன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நிலையில், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதனிடையே, சண்டையின் போது தனது கையிலும் இப்ராஹிம் சுட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடும்பத் தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.