மருத்துவமனையில் தீ…16 கொரோனா நோயாளிகள் பலி!

 

மருத்துவமனையில் தீ…16 கொரோனா நோயாளிகள் பலி!

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

மருத்துவமனையில் தீ…16 கொரோனா நோயாளிகள் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. அத்துடன் நேற்று ஒரே நாளில் 3498 பேர் கொரோனாவுக்கு பலியாகிய நிலையில், 2,97,540 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நிரம்பி வரும் மருத்துவமனைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை என இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனைகளில் விபத்துகளும் அதிகம் அரங்கேறி வருகின்றன.

மருத்துவமனையில் தீ…16 கொரோனா நோயாளிகள் பலி!

இந்நிலையில் குஜராத்தின் பாரூச்சில் உள்ள பட்டேல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 நோயாளிகள், 2 செவிலியர்கள் தீ விபத்தில் உடல்கருகி இறந்தனர். தீ விபத்து காரணமாக பட்டேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சூழலில் குஜராத்தின் பாரூச்சில் உள்ள பட்டேல் மருத்துவமனையில் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். அத்துடன் தீ விபத்தில் இறந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னதாக மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் கசிவினால் கொரோனா நோயாளிகள் பலியான நிலையில், ஏ.சி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் பலியானது உள்ளிட்ட பல அசம்பாவிதங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.