65 எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள போராடும் குஜராத் காங்கிரஸ்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் ரிசார்ட்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் மாற்றம்

 

65 எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள போராடும் குஜராத் காங்கிரஸ்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் ரிசார்ட்களுக்கு  எம்.எல்.ஏ.க்கள் மாற்றம்

இம்மாதம் 19ம் தேதியன்று குஜராத்தில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வும், காங்கிரசும் தலா 2 இடங்களை கைப்பற்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த தினங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆக்சே படேல், ஜிது சவுத்ரி மற்றும் பிரிஜேஷ் மெர்ஜா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம் 65ஆக குறைந்தது. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.

65 எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள போராடும் குஜராத் காங்கிரஸ்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் ரிசார்ட்களுக்கு  எம்.எல்.ஏ.க்கள் மாற்றம்

தற்போதைய நிலவரத்தின்படி, குஜராத்துக்கான ராஜ்யசபா இடங்களில் ஒன்றை மட்டுமே காங்கிரசால் உறுதி வெல்ல முடியும். 2வது இடத்தில் வெற்றி பெற இன்னும் 5 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இந்த சூழ்நிலையில், ராஜ்யசபா தேர்தலுக்கு முன்னதாக மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதற்கான சாத்தியம் உள்ளதாக தகவல் வெளியானது. இது குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு பீதியை கிளப்பியது. இதனையடுத்து கைவசம் உள்ள 65 எம்.எல்.ஏ.க்களையும் தக்க வைத்து கொள்ள என காங்கிரஸ் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது.

65 எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள போராடும் குஜராத் காங்கிரஸ்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் ரிசார்ட்களுக்கு  எம்.எல்.ஏ.க்கள் மாற்றம்

ராஜ்கோட்டில் உள்ள நீல் சிட்டி ரிசார்ட், வதோதராவில் உள்ள ஏரிஸ் ரிவர்சைடு பண்ணைவீடு மற்றும் ராஜஸ்தானில் உள்ள வைல்ட் விண்ட்ஸ் ரிசார்ட் ஆகிய இடங்களில் இன்று காங்கிரஸ் கட்சி தனது 65 எம்.எல்.ஏ.க்களையும் குழு குழுவாக தங்கவைத்துள்ளதாக தகவல். ராஜ்கோட் ரிசார்ட்டில் மட்டும் 40 எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல். இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. குலாப் சிங் ராஜ்புத் கூறுகையில், ராஜ்யசபா தேர்தலுக்கான யுக்தி குறித்து இங்கு ஆலோசனை செய்ய உள்ளோம். எந்தவொரு எம்.எல்.ஏ.வும் கட்சியை விட்டு விலகபோவதில்லை. மக்களுக்கு விசுவாசமற்றவர்கள்தான் கட்சியை விட்டு வெளியேறினர். மக்களின் ஆணையை மதிக்காமல் கட்சியை விட்டு வெளியேறியவர்களை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.