குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்தில் 8 பேர் பலி!

 

குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 19 லட்சத்து ஆயிரமாக உயர்ந்துள்ளது.

குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்தில் 8 பேர் பலி!

இதுவரை 12 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்தில் 8 பேர் பலி!

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் திடீர் தீ விபத்தால் 8 பேர் பலியாகியுள்ளனர். நவுராங்பூரா மாவட்டம் ஷ்ரே என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.