10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பலர் கருத்து தெரிவித்தனர். அதனால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் மறுசுழற்சி முறையில் உபயோகிக்க கூடிய மாஸ்க் வழங்க வேண்டும் என்றும் வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டாம் என்றும் அவர்களை நேரடியாக தேர்வு எழுத அனுமதிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும் என்றும் மாணவர் விடுதிகளை தேர்வு முடியும் வரை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.