சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: கஸ்டடியிலிருந்து தப்பிய காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு!

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை:  கஸ்டடியிலிருந்து தப்பிய காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்து ராஜ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை:  கஸ்டடியிலிருந்து தப்பிய காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு!

இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை:  கஸ்டடியிலிருந்து தப்பிய காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு!

இதை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை:  கஸ்டடியிலிருந்து தப்பிய காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு!

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் தூத்துக்குடியில் கஸ்டடியில் இருந்து தப்பி தலைமறைவாகி உள்ளார் தலைமை காவலர் முத்துராஜ். இதன் காரணமாக அவரை தேடும் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாகியுள்ளனர்.