தொடர்ந்து 8வது மாதம்.. கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

 

தொடர்ந்து 8வது மாதம்.. கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

தொடர்ந்து 8வது மாதமாக கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.11.36 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது.

தொடர்ந்து 8வது மாதம்.. கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது
ஜி.எஸ்.டி.

இந்நிலையில் இந்த நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து 8 மாதமாக கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

தொடர்ந்து 8வது மாதம்.. கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது
ஜி.எஸ்.டி.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1.02 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரி ரூ.17,592 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரி ரூ.22,653 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ரூ.53,199 கோடியும், செஸ் ரூ.9,265 கோடியும் அடங்கும்.