பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர் போக்சோவில் கைது!

 

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர் போக்சோவில் கைது!

கோவை

கோவை அருகே 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சிவகுமரேசன்(40). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், சிவகுமரேசன் கடைக்கு வரும் அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர் போக்சோவில் கைது!

அவ்வப்போது, மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், மாணவியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்துபோது, சிவகுமரேசன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிவகுமரேசனை கைதுசெயனர்.