மதுஅருந்த பணம் தராததால், பாட்டியை கொடூரமாக வெட்டிக் கொன்ற பேரன்!

 

மதுஅருந்த பணம் தராததால், பாட்டியை கொடூரமாக வெட்டிக் கொன்ற பேரன்!

ஈரோடு

ஈரோடு அருகே மது அருந்த பணம் தராததால், ஆத்திரத்தில் பாட்டியை வெட்டிக்கொன்ற மனநலம் பாதித்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த அவல்பூந்துறை பாரதிவீதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி ஜெலின் மேரி. இவர்களது மகன் பூவிழி செல்வன். இவருக்கு திருமணமாகி ஷர்மிளா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பூவிழி செல்வனுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, அவர் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மிளா கோவையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால், நேற்று முன்தினம் தனது மாமனார் வீட்டிற்கு சென்ற பூவிழிசெல்வன், அங்கு மது அருந்திவிட்டு மாமனாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்கள் பூவிழிசெல்வனை தாக்கி, வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.

மதுஅருந்த பணம் தராததால், பாட்டியை கொடூரமாக வெட்டிக் கொன்ற பேரன்!

நள்ளிரவில் அவல்பூந்துறைக்கு வந்த பூவிழிசெல்வன், தனது தாய் ஜெலின்மேரியிடம் மதுஅருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் ஜெலின்மேரி பணம் தர மறுத்து, வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பூவிழி செல்வன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 95 வயது பாட்டி காளியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அரச்சலூர் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பூவிழிசெல்வனை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.