இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலி!

கோவை

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.

கோவை உக்கடம் பகுதியில் வசித்து வந்தவர் பத்மாவதி (60). இவர் தனது மகளுடன் காந்திபுரத்துக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். உக்கடம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது உரசியது.

இதில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பத்மாவதியின் மீது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது மகள் சேலான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலி!

தகவல் அறிந்த கோவை பெரியகடைவீதி காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.