வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உயிரிழப்பு!

 

வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உயிரிழப்பு!

கன்னியாகுமரி

நாகர்கோயிலில் இரவில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் தளவாய் தெருவில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (70). கணவர் உயிரிழந்த நிலையில், மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். இதனால் மூதாட்டி ஓட்டு வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உயிரிழப்பு!

நள்ளிரவில் வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் மூதாட்டி ஆறுமுகம் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு திரண்ட அந்த பகுதி மக்கள், இது குறித்து தீயணைப்பு நிலையம் மற்றும் கோட்டாறு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.தொடர்ந்து, கோட்டாறு போலீசார் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.