காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

 

காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

கோவை

கோவையில் காட்டுயானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் நேற்றிரவு 2 யானைகள் புகுந்தன. இதனை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் நேற்றிரவு முதல் ஈடுபட்ட வந்தனர்.

காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் இரு யானைகளும் பிரிந்து வனப்பகுதியை நோக்கி சென்றன. அப்போது இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற அதேபகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்ற மூதாட்டியை, காட்டுயானை பலமாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அந்த யானை தோட்டப்பகுதியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராணியம்மாள் என்ற மூதாட்டியையும் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள், பட்டாசுகளை வெடித்தும், சத்தம் எழுப்பியும், யானையை விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினரும், போலீசாரும் பாப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

மேலும், படுகாயம் அடைந்த ராணியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய அப்பகுதி மக்கள், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர். எனவே, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் போதே அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.