கணவர் இறந்த வேதனையில் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

 

கணவர் இறந்த வேதனையில் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

கோவை

பொள்ளாச்சி அருகே கணவர் உயிரிழந்த சோகத்தில் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பெரியகளந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (94). இவரது மனைவி சுப்பாத்தாள் (80). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ராமசாமி நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவர் இறந்த வேதனையில் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

இதனால் அவரது மனைவி சுப்பாத்தாள் மிகுந்த வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குதித்து, அவர் தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து நெகமம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் உயிரிழந்த வேதனையில் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.