சொத்து தகராறில் பாட்டி அடித்துக்கொலை – பேரன் கைது!

 

சொத்து தகராறில் பாட்டி அடித்துக்கொலை – பேரன் கைது!

நாகை

வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் பாட்டியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாககுடையான் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவரது மனைவி காந்திமதி (74). இவர்களது மகள் ராணி. அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் ரஞ்சித்(23). இவர் தனது தாயாருக்கு சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி, தாத்தா செல்வராஜிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

சொத்து தகராறில் பாட்டி அடித்துக்கொலை – பேரன் கைது!

நேற்று இரவு மீண்டும் செல்வராஜின் வீட்டிற்கு சென்ற ரஞ்சித், சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி உள்ளது. இதனால், காந்திமதி ரஞ்சித்தை தடுக்க முயன்றுள்ளார். அப்போது, ரஞ்சித் கையால் தாக்கியதில் கீழே விழுந்த காந்திமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீசார், விரைந்து சென்று காந்திமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்தை கைது செய்தனர். சொத்து தகராறில் பாட்டியை பேரனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.