சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து தாத்தா, பேரன் பலி!

 

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து தாத்தா, பேரன் பலி!

தென்காசி

சங்கரன்கோவில் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை மற்றும் அவரது தாத்தா உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோணுகாலை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவரது 2 வயது பேரன் ஹரிவர்ஷன். இந்த நிலையில், மாரியப்பன் நேற்று காலை, தனது பேரனை அழைத்துக்கொண்டு, விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றுக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக இருவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கினர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து தாத்தா, பேரன் பலி!

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது, மாரியப்பன் மற்றும் குழந்தை ஹரிவர்ஷன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவலின் பேரில் பனவடலிசத்திரம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.