இறந்து போன பாட்டி -அடக்கம் செய்த உறவினர்கள் -மறுநாள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ரீசார்ஜ் செய்ய பணம் தாராத பாட்டியை ஒரு பேரன் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது
உத்திர பிரதேச மாநிலம் கோட்வாலி காவல் நிலையத்தின் கீழ் உள்ள பத்ரா கிராமத்தில் வசிக்கும் ஒரு 16 வயதான டீனேஜ் சிறுவன் தன்னுடைய பெற்றோர் மற்றும் வயதான பாட்டியோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பாட்டியை ஒருநாள் வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவரின் உறவினர்கள் அனைவரும் வெளியே போய் விட்டார்கள் .அப்போது அந்த வீட்டில் அந்த பாட்டியின் 16 வயதான பேரனும் அவரின் நண்பர்கள் மட்டும்தான் இருந்தார்கள் .
அப்போது அவர்கள் அனைவரும் மொபைலில் விளையாடிக்கொண்டிருந்தனர் .அப்போது அந்த பேரனுக்கு மொபைலில் டேட்டா தீர்ந்து விட்டது .அதனால் அந்த பேரன் வீட்டிலிருந்த பாட்டியிடம் ரீசார்ஜ் செய்ய பணம் கேட்டார் .அதற்கு அந்த பாட்டி பணம் தர மறுத்து விட்டார் .அதனால் கோவப்பட்ட அந்த பேரன் அவரின் நண்பர்களோடு சேர்ந்து அந்த பாட்டியை அடித்து கொன்று விட்டனர் .பின்னர் வீட்டுக்கு வந்த அவரின் பெற்றோரிடம் பாட்டி மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறிவிட்டனர் .அதை உண்மையென்று நம்பிய அந்த உறவினர்கள் பாட்டியை அடக்கம் செய்து விட்டனர் .பிறகு அவர்களுக்கு சந்தேகம் வந்து அந்த பேரனை பிடித்து விசாரித்தார்கள் .அப்போது அந்த பேரன் ரீசார்ஜ் செய்ய பாட்டி பணம் கொடுக்காததால் தான் பாட்டியை கழுத்தை நெறித்து கொன்று விட்டதாக கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அந்த சிறுவன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்தார்கள் .