உசிலம்பட்டி பெண் சிசு கொலை: பாட்டி கைது

 

உசிலம்பட்டி பெண் சிசு கொலை: பாட்டி கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்து 7 நாளே ஆன சின்னச்சாமி- சிவப்பிரியா தம்பதியின் சிசுவை கொன்றதாக பாட்டி நாகம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டி பகுதியில் வசித்து வந்த தம்பதி சின்னச்சாமி – சிவப்பிரியங்கா. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும் 3 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு பிறந்த 3ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கின்றனர். இந்த சூழலில்தான் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்துவிட்டதாக உறவினர்களிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தையின் பெற்றோரே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

உசிலம்பட்டி பெண் சிசு கொலை: பாட்டி கைது

போலீசாரின் சந்தேகத்தை மேலும் உறுதிபடுத்தும் விதமாக பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டு உறுதியானது. பிரேத பரிசோதனை அறிக்கையில், செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் 7 நாள் பெண் குழந்தை உயிரிழந்த வழக்கில் பாட்டி நாகம்மாள் கைது செய்யப்பட்டார்.