விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மூழ்கி தாத்தா – பேரன் பலி!

 

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மூழ்கி தாத்தா – பேரன் பலி!

தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மீன்பிடித்த போது, நீரில் மூழ்கி தாத்த, பேரன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் சைவத்துரை (64). விவசாயி. இவரது மகள் சுப்புலட்சுமியின் மகன் மதன் (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று சைவத்துரை, பேரன் மதனுடன் அங்குள்ள வைப்பாற்றுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார்.

இந்த நிலையில், மாலை ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வைபாற்றில் சென்று பார்த்தனர். அப்போது, ஆற்றின் கரையில் அவரது இருசக்கர வாகனம் தனியே நின்றிருந்தது. இதனால் இருவரும் நீரில் மூழ்கியிருக்கலாம் என கருதிய உறவினர்கள், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மூழ்கி தாத்தா – பேரன் பலி!

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவாகியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியது. அப்போது, சைவத்துரை மற்றும் மதன் ஆகியோரை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

மாசார்பட்டி போலீசார், உடல்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.