அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக்கூட்டம் ரத்து! திடீர் அறிவிப்பு ஏன்?

 

அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக்கூட்டம் ரத்து! திடீர் அறிவிப்பு ஏன்?

மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை நடைபெறாவிருந்த கிராம சபை கூட்டங்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக்கூட்டம் ரத்து! திடீர் அறிவிப்பு ஏன்?

இதுகுறித்து திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அன்பார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஒரு முக்கிய செய்தி,
நாளை நடைபெற உள்ள கிராம சபை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கு இணங்க ஒத்தி வைக்கப் படுகிறது. ஆகவே அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகர்களும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் கூட்டம் கூடுதலை தவிர்த்து முக கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தவும்.
நன்றி்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.