இனி திறந்தநிலை கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு இல்லை -ஐகோர்ட் திட்டவட்டம்

 

இனி திறந்தநிலை கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு இல்லை -ஐகோர்ட் திட்டவட்டம்

திறந்த நிலை கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு இனி அரசு துறைகளில் பதவி உயர்வு இல்லை என்ற உத்தரவை பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

இனி திறந்தநிலை கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு இல்லை -ஐகோர்ட் திட்டவட்டம்

பத்திரப்பதிவு துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளர் ஆக தேர்வு செய்யப்பட்ட செந்தில்குமார் துறைரீதியாக நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் கூட தனக்கு முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்தும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட கோரிக்கை விடுத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், திறந்தநிலை கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், திறந்தநிலை கல்வி மூலம் முதுகலை படித்திருந்தாலும் பதவி உயர்வுக்கு தகுதி என்கிற முந்தைய அரசின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.