சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

 

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி

தருமபுரியில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஈஸ்வரி (42). இவரது மகள் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காத நிலையில், பாப்பாரப்பட்டி அடுத்த பாலவாடி கிராமத்தை சேர்ந்த தனியார் பட்டதாரி ஆசிரியர் சேகர் என்பவர் கடத்திச்சென்றாக தகவல் கிடைத்தது.

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

இதனையடுத்து, மாணவியின் தாய் ஈஸ்வரிபாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், சேகரை தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று வெள்ளிசந்தை பகுதியில் பதுங்கியிருந்தவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவியை கடத்தி திருமணம் செய்துகொண்டதாக சேகர் தெரிவித்தார். இதனையடுத்து, மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக அவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்