பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பட்டதாரி பெண் தற்கொலை!

 

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த  பட்டதாரி பெண் தற்கொலை!

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயராமன்-புனிதா தம்பதியினர். இவர்களது மகள் தர்ஷினி (21). இவர் பி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம், தம்பதியினர் இருவரும் தோட்ட வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டிலிருந்த தர்ஷினி சமையல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் தர்ஷினியை, பெற்றோர் கண்டித்து உள்ளனர்.

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த  பட்டதாரி பெண் தற்கொலை!

இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். நேற்று காலை ஜெயராமனும், புனிதாவும் தோட்ட வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியே இருந்த தர்ஷினி சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். சற்று நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், தர்ஷினி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், தர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.