படிப்படியாக மாதாந்திர மின் கட்டணம்..தங்கர்பச்சானின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி

 

படிப்படியாக மாதாந்திர மின் கட்டணம்..தங்கர்பச்சானின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மாதந்தோறும் மின்கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் மக்களின் சுமை குறையும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையும் மாதாந்திர மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். அப்படி மின் கட்டணம் அமல்படுத்தினால் தற்போது என் வீட்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறேன் . இந்த மின் சுமை குறைந்து 18 ஆயிரம் ரூபாயாக எனக்கு குறையும் என்றார் இயக்குனர் தங்கர்பச்சான் .

படிப்படியாக மாதாந்திர மின் கட்டணம்..தங்கர்பச்சானின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி

அவர் மேலும், என் ஒருத்தனுக்கு இப்படி என்றால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மின் கட்டண சுமை குறையும். மாதாந்திர மின் கட்டணத்தைத் மக்கள் எல்லோரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதை உடனே முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தங்கர்பச்சானின் இந்த கோரிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர் மின் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று சொன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேரில் சென்று தங்கர்பச்சானுக்கு விளக்கம் அளித்தனர்.

படிப்படியாக மாதாந்திர மின் கட்டணம்..தங்கர்பச்சானின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி

சட்டமன்றத்திலும் இது தொடர்பான விவாதத்தின்போது தங்கர் பச்சானுக்கு மின்சார கட்டணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதன் பின்னர் தங்கர்பச்சான், தனது கோரிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது . நான் மின் கட்டணத்தில் குழப்பம் என்று சொல்லவில்லை. மாதாந்திர கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன் என்று மீண்டும் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தங்கர்பச்சானின் கோரிக்கை மாதாந்திர மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதுதான் . அந்தக் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.