கணவன் மனைவிக்குள் வந்த சண்டை -அடுத்து குழந்தையை காருக்குள் பூட்டி நடந்த கொடுமை .

 

கணவன் மனைவிக்குள் வந்த சண்டை -அடுத்து குழந்தையை காருக்குள் பூட்டி நடந்த கொடுமை .


கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சன்டையால் அவர்களின் குழந்தையை காரில் பூட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்

கணவன் மனைவிக்குள் வந்த சண்டை -அடுத்து குழந்தையை காருக்குள் பூட்டி நடந்த கொடுமை .


உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் படல்பூரில் உள்ள சாப்ராலா கிராமத்தில் வசிப்பவர் சுகன் ஷர்மா மற்றும் அவரது மனைவி நீது இருவரும் புலந்த்ஷாரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள் .அவர்கள் கடந்த 2019 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஒரு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது .இருவருக்குள்ளும் திருமணம் நடந்த நாள் முதல் அவர்களுக்குள் சண்டை வந்துகொண்டேயிருந்துள்ளது .இதற்கு காரணம் அவர்களின் பூர்வீக சொத்தை விற்க அந்த மனைவி கணவனை விற்க டார்ச்சர் செய்தார் .
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை புலந்த்ஷாஹர்-கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலையில்.அந்த தம்பதியினர் தங்களின் ஒரு வயது குழந்தையோடு காரில் போய்க்கொண்டிருந்தனர் .அப்போது இந்த சொத்து விஷயமாக மீண்டும் அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது .
அதனால் கோவப்பட்ட கணவன் அவரின் மனைவியை காரிலிருந்து இறக்கிவிட்டு, அந்த குழந்தையை காருக்குள் வைத்து பூட்டி விட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார் .அதன் பிறகு பொதுமக்கள் அந்த நடுரோட்டில் கூடிவிட்டனர் ,பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் வந்து அந்த குழந்தையை காரிலிருந்து மீட்டனர் .பிறகு குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கை மேலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள் .