அரசுப்பள்ளி ஆசிரியர் லாரி ஏற்றி படுகொலை… சக ஆசிரியை கணவர் உள்பட 8 பேர் கைது

 

அரசுப்பள்ளி ஆசிரியர் லாரி ஏற்றி படுகொலை… சக ஆசிரியை கணவர் உள்பட 8 பேர் கைது

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே கள்ளக்காதல் விகாரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியரை லாரி ஏற்றி படுகொலை செய்த, ஆசிரியையின் கணவர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (37). இவர் ஊத்தங்கரை ஜோதிநகர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி பணிக்ஞகு சென்ற சிவக்குமார், நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு காட்டுப்பகுதியில்  தலைமீது லாரியை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கொலையான சிவக்குமாரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில், அவருடன் பணிபுரிந்த ஆசிரியையின் கணவர் உள்ளிட்ட சிலரை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் லாரி ஏற்றி படுகொலை… சக ஆசிரியை கணவர் உள்பட 8 பேர் கைது

விசாரணையில், பள்ளியில் சிவகுமாருடன் பணிபுரியும் ஊத்தங்கரையை சேர்ந்த இளங்கோ என்பவரது மனைவி லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்து இளங்கோ இருவரையும் கண்டித்தும், அவர்கள் தொடர்ந்து தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் வட்டம் பகுதியை கூலிப்படையினரை ஏவி கொலை செய்ய கூறியுள்ளார்.

அதன்படி, கூலிப்படையினர் கடந்த 29ஆம் தேதி ஆசிரியரை  காரில் கடத்திசென்று நாட்றம்பள்ளி அருகேயுள்ள வெலக்கல்நத்தம் செட்டேரி அணை பகுதியில் கொலை செய்துள்ளனர். பின்னர், பங்களாமேடு ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உடலை கீழே தள்ளி அவர் தலை மீது லாரி ஏற்றி விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதனை அடுத்து கொலையாளிகள் இளங்கோ, கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி(40), அதிமுக நிர்வாகி மகன் கணேசன்(35) உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைதுசெய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.