சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் மோதி, அரசு மருத்துவமனை செவிலியர் பலி!

 

சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் மோதி, அரசு மருத்துவமனை செவிலியர் பலி!

மயிலாடுதுறை

சீர்காழி அருகே 15 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் மோதிய விபத்தில், அரசு மருத்துவமனை செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள உடையூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி உஷா (40). இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள எடமணல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று, எடமணல் அருகே உள்ள உமையாள்புரம் பகுதிக்கு சென்ற உஷா, அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் மோதி, அரசு மருத்துவமனை செவிலியர் பலி!

பின்னர், மருத்துவமனைக்கு செல்வதற்காக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக 15 வயது சிறுவன் ஓட்டிவந்த டிராக்டர், எதிர்பாராத விதமாக செவிலியர் உஷா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து, தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுவனை கைது செய்தனர்.