தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனை கட்டண குறைப்பு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

 

தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனை கட்டண குறைப்பு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை இருந்தால் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனை கட்டண குறைப்பு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

இந்நிலையில் ஐ.சி.எம்.ஆர் பிசிஆர் பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ. 4500 கட்டணம் நிர்ணயிக்கலாம் என தெரிவித்திருந்த நிலையில் பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. PCR சோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருந்து PCR சோதனை செய்தால் ரூ.2500 மட்டுமே வசூலிக்க வேண்டும் ( வீட்டிற்கு வந்து சோதனை செய்தால் கூடுதலாக 500 வசூலிக்கலாம் ) என்றும் முதலமைச்சர் காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000 மட்டுமே வசூலிக்க வேண்டும், ( வீட்டிற்கு வந்து சோதனை செய்தால் கூடுதலாக 500 ரூ வசூலிக்கலாம் ) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.