தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை இருந்தால் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதாவது, தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் லேசான அறிகுறிகளுடன் A1 , A2 பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.7,500 கட்டணம் வசூலிக்கலாம் என்றும் லேசான அறிகுறிகளுடன் A3 , A4 பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும், இதுவே அதிகபட்ச கட்டணம் என்றும் இதற்கு மேல் வசூலிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.