9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! தொடர்ந்து போராட்டம் நடைபெறும்- விவசாயிகள்

 

9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! தொடர்ந்து போராட்டம் நடைபெறும்- விவசாயிகள்

விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 19ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், மழைக்கும் மத்தியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகி உள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! தொடர்ந்து போராட்டம் நடைபெறும்- விவசாயிகள்

விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களின் கோரிக்கையை ஏற்காவிடில் ஒரு வருடம் வரையில் கூட போராட்டத்தை தொடர தயார் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே தங்களின் கோரிக்கைகள் என்றும், வேறு எந்த சலுகைகளையும் பெற நாங்கள் தயாராக இல்லை என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளுடன் இன்று நடைபெற்ற 9-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என  விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து வரும் 19-ம் தேதி 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.