‘வாயில் துணி அடைத்தப்படி’ எரிந்து கிடந்த சடலம்; அரசு ஊழியர் மர்ம மரணம்!

 

‘வாயில் துணி அடைத்தப்படி’ எரிந்து கிடந்த சடலம்; அரசு ஊழியர் மர்ம மரணம்!

மயிலாடுதுறையில் வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த அறிவுடைநம்பி(58) என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம் போல அவர் கூட்டுறவு சங்கத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட நேரில் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அறிவுடைநம்பியின் வீட்டார் சக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.

‘வாயில் துணி அடைத்தப்படி’ எரிந்து கிடந்த சடலம்; அரசு ஊழியர் மர்ம மரணம்!

இந்த நிலையில், அறிவுடைநம்பி பார்வையிடச் சென்ற கட்டுமான பணி நடைபெறும் இடத்தின் வாயிலில் அவர் வாயில் துணியை அடைத்தபடி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், அறிவுடைநம்பி பெட்ரோல் கேனுடன் சென்றது பதிவாகி இருந்துள்ளது.

அதனிடப்படையில் பார்த்தல் அறிவுடைநம்பி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வாயில் துணி அடைக்கப்பட்டிருந்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அறிவுடைநம்பி கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துக் கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.