செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவர் தற்கொலை!

 

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவர் தற்கொலை!

கரூர்

கரூரில் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டம் முத்தலாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்தன். விவசாயி. இவரது மகன் ஆசிக் (19). இவர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், வீட்டில் இருந்து வந்த ஆசிக் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடி வந்துள்ளார்.

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவர் தற்கொலை!

இதனை, அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிக் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் மகன் சடலமாக தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர பெற்றோர் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த தான்தோன்றிமலை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.