கடனை திருப்பிக்கேட்ட அரசுப் பேருந்து நடத்துனர்… கொடூரமாக வெட்டிக்கொன்ற நண்பன்!

 

கடனை திருப்பிக்கேட்ட அரசுப் பேருந்து நடத்துனர்… கொடூரமாக வெட்டிக்கொன்ற நண்பன்!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருக கடன் தகராறில் அரசுப்பேருந்து நடத்துனரை வெட்டிகொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கோவையில் அரசுப்பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சுப்ரமணியனுக்கு, ஜோதியேந்தல் பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், சுப்ரமணியனிடம் இருந்து முத்துராஜ் கடனாக பணம் பெற்றுள்ளார்.

கடனை திருப்பிக்கேட்ட அரசுப் பேருந்து நடத்துனர்… கொடூரமாக வெட்டிக்கொன்ற நண்பன்!

நீண்ட நாட்கள் ஆகியும் கடனை திருப்பி தராததால் சுப்ரமணி பணத்தை தருமாறு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், நேற்றிரவு பணத்தை கேட்டு முத்துராஜின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். அப்போது, பணத்தை கொடுப்பதாக கூறி சந்தைபேட்டை பகுதிக்கு அழைத்துச் சென்ற முத்துராஜ், அங்கு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார்.

இதில் பலத்த காயமடைந்த சுப்ரமணியனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய சத்திரக்குடி போலீசார், கொலையாளி முத்துராஜாவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.