ஒழுங்கா சில்லறை கொடு… ஓடும் பேருந்தில் முதியவரை தாக்கிய கண்டக்டர் : வைரல் வீடியோ!

 

ஒழுங்கா சில்லறை கொடு… ஓடும் பேருந்தில் முதியவரை தாக்கிய கண்டக்டர் : வைரல் வீடியோ!

ஈரோடு அருகே அரசு பேருந்தில் சில்லறை கேட்டு நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒரு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் டிக்கெட்டுக்கு சரியான சில்லறை கொடுக்கவில்லை. இதனால் நடத்துனருக்கும் அந்த முதியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, குடிபோதையில் தகராறு செய்ய வேண்டாமென தகாத வார்த்தையில் நடத்துனர் கூறியிருக்கிறார். தான் மது அருந்தவில்லை எனக்கூறி பதிலுக்கு அந்த முதியவர் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

ஒழுங்கா சில்லறை கொடு… ஓடும் பேருந்தில் முதியவரை தாக்கிய கண்டக்டர் : வைரல் வீடியோ!

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, நடத்துனர் அந்த முதியவரை தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், நடத்துனரை கண்டித்துள்ளனர். இந்த காட்சியை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நெட்டிசன்கள் இதற்கு கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

சரியான சில்லறை கொடுக்காததால் நடத்துனர் முதியவரை தாக்கும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்துக் கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.