மாட்டு வண்டிகள் மீது அரசுப்பேருந்து மோதல் – இருவர் படுகாயம்!

 

மாட்டு வண்டிகள் மீது அரசுப்பேருந்து மோதல் – இருவர் படுகாயம்!

திருச்சி

திருச்சியில் நேற்றிரவு மணல் ஏற்றிச்சென்ற மாட்டுவண்டிகள் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். .

திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகேயுள்ள கம்பரசம்பேட்டை பெரியார்நகரை சேர்ந்தவர் திவாகர்(28). அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(40). இவர்கள் மாட்டு வண்டி மூலம் மணல் லோடு ஏற்றிச்செல்லும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் திவாகர் மற்றும்முருகேசன் ஆகியோர் பெரியார் நகரில் மணல் ஏற்றிகொண்டு நொச்சியத்துக்கு சென்று கொண்டிருந்தனர். கம்பரம்பேட்டை வாட்டர்ஹவுஸ் அருகே திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப்பேருந்து மாட்டு வண்டிகள் மீது மோதியது.

மாட்டு வண்டிகள் மீது அரசுப்பேருந்து மோதல் – இருவர் படுகாயம்!

இதில் மாட்டு திவாகர் மற்றும் முருகசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும், 2 மாடுகளும் பலத்த காயமடைந்தன. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருச்சி அரசமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஜீயபுரம்காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.