“அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்றால் நடவடிக்கை”

 

“அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்றால் நடவடிக்கை”

ஈரோடு

அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமார், இன்று ஈரோட்டில் உள்ள கேபிள் டிவி கட்டுபாட்டு மையம் மற்றும் அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 93 ஆயிரம் செட்டாப் பாக்ஸகள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது சுமார் 23 செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறினார்.

“அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்றால் நடவடிக்கை”

இதுபோன்று பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு ஆப்பரேட்டர்களும், அதிகாரிகளுமே பொறுப்பு என்று கூறிய குறிஞ்சி சிவக்குமார், அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள செட்டப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால், அந்த செட்டாப் பாக்ஸ்களுக்கான விலை வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சில ஆப்பரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பதாக புகார் வந்துள்ளதாகவும், அதனை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.