ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் காட்டிய அரசு பள்ளி ஆசிரியர்

 

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் காட்டிய அரசு பள்ளி ஆசிரியர்

நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்பில் மாணவியருக்கு ஆபாச படம் காட்டிய அரசு பள்ளி ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் காட்டிய அரசு பள்ளி ஆசிரியர்

ராசிபுரத்தை அடுத்துள்ள வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியர் எடின் பரோகோமகன் (53). இவர் மாணவியருக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியபோது ஆபாசபடம் காட்டியதாக புகார் எழுந்தது. ஆன்லைன் வகுப்பில் மட்டுமல்லாது, மாணவிகள் பள்ளிக்கு வந்த பின்னரும் கோமகன் இதுபோன்ற அநாகரீகமான செயல்களை செய்துவந்துள்ளார். 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இயற்பியல் பாடம் நடத்த வந்த உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ கோமகன், கணிணி ஆய்வகத்தில் உள்ள புரஜெக்டர் மூலம் ஆபாச படம் காட்டி, பாடம் நடத்தியதுடன் ஆபாசமாக பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் பள்ளிக்கு நேரில் சென்று, மாணவியரை அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் ஆசிரியரையும் அழைத்து விசாரித்தார். விசாரணை அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பிவைத்தார். அதன்படி, உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ கோமகனை, வடுகம் பள்ளியில் இருந்து மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டுள்ளார். வாரத்தில் 7 நாட்களும் மங்களபுரம் பள்ளியில் அவர் பணியாற்றவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.