கடன் தொல்லையால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை!

 

கடன் தொல்லையால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை!

ஈரோடு

பவானி அருகே கடன் தொல்லையால் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (54). இவர் குறிச்சி பெரியாண்டிபாளையம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, பாஸ்கரன் கடன் தொல்லையால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

கடன் தொல்லையால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை!

வெளியே சென்றுவிட்டு வந்த மனைவி, வீட்டில் பாஸ்கரன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பவானி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.