அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்வு!

 

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்வு!

தமிழக அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்டவோ, வாங்கவோ அரசு சார்பில் முன்பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது. அதாவது. அரசு பணியில் உள்ள ஊழியர்கள் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டவும் அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கவும் தமிழக அரசு சார்பில் முன்பணம் வழங்கப்படுகிறது.

அதன்படி சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்கும் மாவட்டத்தின் ஆட்சியரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட நிதி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முன்பணமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்பட்டுவந்தது.

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்வு!

இந்நிலையில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்ந்துள்ளது. வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.