அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும்

 

அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. http://tngasa.in, http://tndceonline.org இல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யப்பட்டுவருகிறது. இணைய வசதி இல்லாத மாணவர்கள் 38 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும்

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும், http://tngasa.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சான்றிதழ் பதிவேற்றம் நாளை தொடங்க இருந்த நிலையில், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, இதுவரை 2.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்திருப்பதாகவும் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.