வாழப்பாடி அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து – 14 பயணிகள் காயம்

 

வாழப்பாடி அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து – 14 பயணிகள் காயம்

சேலம்

வாழப்பாடி அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண் பயணிகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து, நேற்று சேலத்திற்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெரிய கிருணாபுரம் அருகே சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், தறிகெட்டு ஓடிய பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில், பேருந்து ஓட்டுநர், பயணிகள் என 14 பேர் பலத்த காயமடைந்தனர்.

வாழப்பாடி அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து – 14 பயணிகள் காயம்

தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.