டேங்கர் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 16 பயணிகள் காயம்

 

டேங்கர் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 16 பயணிகள் காயம்

சென்னை

பூந்தமல்லி அருகே சாலையில் நின்ற டேங்கர் லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 12 பெண்கள் உள்பட 16 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை ஜெயராமன் என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த நிலையில் குமணன்சாவடி அருகே சென்றபோது சிக்னலில் நின்றிருந்த டேங்கர் லாரியின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதில், பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பெண்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர்.

டேங்கர் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 16 பயணிகள் காயம்

அவர்கள் அனைவரும் பூந்தமல்லி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்த பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த சொக்கம்மாள் என்பவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக்க கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் ஜெயராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.