’26 புதிய தொழில் திட்டங்களுக்கு அரசு அனுமதி’ 40,933 பேருக்கு வேலைவாய்ப்பு!

 

’26 புதிய தொழில் திட்டங்களுக்கு அரசு அனுமதி’ 40,933 பேருக்கு வேலைவாய்ப்பு!

நிலுவையில் இருந்த 26 புதிய தொழில் திட்டங்களுக்கு உயர்மட்டக் குழுவில் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை உறுதி செய்வதற்காக, முதலீட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இன்று காலை ஆலோசனை உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்.சி சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

’26 புதிய தொழில் திட்டங்களுக்கு அரசு அனுமதி’ 40,933 பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்த நிலையில், அக்கூட்டத்தில் நிலுவையில் இருந்த 26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய தொழில் திட்டங்கள் மூலம், 49,033 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்தவும் அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும், ரூ.25,213 கோடி முதலீடுகள் கிடைக்கும் இந்த 26 திட்டங்களை திருப்பூர், நாமக்கல், கோவை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.