“உன் பொண்ணையும் தொடுவோம் ,உன்னையும் சுடுவோம்” -டீனேஜ் பெண்ணின் தந்தைக்கு ஏற்பட்ட நிலை

 

“உன் பொண்ணையும் தொடுவோம் ,உன்னையும் சுடுவோம்” -டீனேஜ் பெண்ணின் தந்தைக்கு ஏற்பட்ட நிலை

தன் மகளை பாலியல் தொல்லை கொடுத்தவர்களை பற்றி போலீசில் புகார் கூறிய தந்தையை சிலர் சுட்டு கொன்றார்கள்.

“உன் பொண்ணையும் தொடுவோம் ,உன்னையும் சுடுவோம்” -டீனேஜ் பெண்ணின் தந்தைக்கு ஏற்பட்ட நிலை

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சஸ்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவுசர்பூர் கிராமத்தில் அம்பரீஷ என்ற நபர் தன்னுடைய டீனேஜ் மகளோடு வசித்து வந்தார்.இந்நிலையில் அந்த டீனேஜ் பெண்ணுக்கு  அந்த பகுதியில் வசிக்கும் சில வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தவண்ணமிருந்துள்ளார்கள் .அதனால் அந்த பெண் இந்த ரோமியோக்களின் தொல்லை பற்றி அவரின் தந்தையிடம்  கூறினார் .மேலும் அவர் அங்குள்ள தோடட தொழிளா லராக வேலை பார்த்து வந்துள்ளார் .இதனால் அந்த பகுதி ரோமியோக்களை பற்றி அம்ரீஷ் கடந்த திங்கள் கிழமையன்று போலீசில் புகார் கூறினார் .

இதனால் போலீசார் அந்த ரோமியோக்களை பிடித்து விசாரித்தார்கள் ,மேலும் அவர்களை எச்சரித்துள்ளார்கள் .இதனால் கோபப்பட்ட அந்த வாலிபர்கள் அந்த பெண்ணின் தந்தை அமரீஷை அங்குள்ள தோட்டத்தில் வைத்து சுட்டு விட்டார்கள்  .அதை பார்த்து அதிர்ச்சியான அங்கிருந்த தோட்ட தொழிலாளர்கள் அமரீஷை அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .அப்போது ஹாஸ்ப்பிட்டலுக்கு செல்லும் வழியில் அவர் இறந்தார் .இதனால் அந்த அம்ரேஷின் மகள் அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய தந்தையை கொன்றவர்கள் மீது புகாரளித்தார் .அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .இதற்கிடையில், இறந்த அமரீஷின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். இறந்த அம்பரீஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை  பெயரிட்டு புகார் அளித்துள்ளதாகவும் , இது குறித்து  விசாரிக்கிறோம்  என்றும் போலீசார்  கூறினர்.

“உன் பொண்ணையும் தொடுவோம் ,உன்னையும் சுடுவோம்” -டீனேஜ் பெண்ணின் தந்தைக்கு ஏற்பட்ட நிலை