“நான் பப்ஜி விளையாடியதால் தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சினை?” – ஹைகோர்ட்டில் முறையிட்ட பப்ஜி மதன்!

 

“நான் பப்ஜி விளையாடியதால் தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சினை?” – ஹைகோர்ட்டில் முறையிட்ட பப்ஜி மதன்!

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18+ என்ற யூடியூப் சேனல்கள் மூலமாக தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக மதன் குமார்என்பவர் மீது புகார் எழுந்தது. இதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

“நான் பப்ஜி விளையாடியதால் தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சினை?” – ஹைகோர்ட்டில் முறையிட்ட பப்ஜி மதன்!

இந்த வழக்கில் ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

“நான் பப்ஜி விளையாடியதால் தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சினை?” – ஹைகோர்ட்டில் முறையிட்ட பப்ஜி மதன்!

தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு எனவும் கூறியுள்ளார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வில், திங்கள் கிழமை (ஆகஸ்ட் 9) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.