வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் : முதலமைச்சர் உறுதி!

 

வன்னியர் இடஒதுக்கீடு  விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் : முதலமைச்சர்  உறுதி!

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார்.

வன்னியர் இடஒதுக்கீடு  விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் : முதலமைச்சர்  உறுதி!

10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக எம்எல்ஏ ஜிகே மணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் . இது குறித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் ஜி.கே. மணி பேசினார்கள்.

வன்னியர் இடஒதுக்கீடு  விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் : முதலமைச்சர்  உறுதி!

ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் இவர் மூலம் ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதிலே அவர் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அதனுடைய முக்கியத்துவத்தை இதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி நிறைவாக குறிப்பிடுகின்ற போது தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ் நாடு சட்டம் 8/2021ஐ விரைந்து செயல்படுத்தும் படியும், அதற்கு தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாக பிறக்க முடியும் பிறப்பிக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

நான் இதை எல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொரோனாவை குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்து இருக்கிறோம். ஆகவே பாமக உறுப்பினர் உடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.