சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.48 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

 

சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.48 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த தங்கத்தையும், திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தப்பட்ட தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.48 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

அண்மைக் காலமாக வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டாலும், தங்கம் கடத்தல் தொடர்கதையாகி உள்ளது. ஆசன வாயிலில் மறைத்து வைத்தும், உடைமைகளில் மறைத்து வைத்தும், தலையில் வைக்கும் விக்கில் மறைத்து வைத்தும் தங்கம் கடத்தப்படுவதை சுங்கத்துறை அதிகாரிகள், கையும் களவுமாக பிடித்து விடுகின்றனர். இருப்பினும், தமிழகத்தில் தங்கத்தை கடத்தி விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இது போன்ற சம்பவங்கள் தொடருவதாக கூறப்படுகிறது.

சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.48 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ. 39 லட்சம் மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போல, திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.9.13 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ஏர்போர்ட்டிற்கு தங்கத்தை கடத்தி வந்த நபர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கேயே போட்டுவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர்.